Viral Video : மருத்துவமனைக்கு கையில் பாம்புடன் வந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - Tamil News | Viral Video Bihar Old Man Bitten By Russell's Viper Snake He Is Going To Bhagalpur Hospital | TV9 Tamil

Viral Video : மருத்துவமனைக்கு கையில் பாம்புடன் வந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Snake Video : பீகார் மாநிலத்தில் நபர் ஒருவர் பாம்புடன் மருத்துவமனைக்குச் சென்றதால் அதிர்ச்சி. தன்னை கடித்த மிக கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றதால் அங்குள்ள மருத்துவர்கள் ஷாக் ஆகினர்.

Viral Video : மருத்துவமனைக்கு கையில் பாம்புடன் வந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

வைரல் வீடியோ

Published: 

18 Oct 2024 15:17 PM

தற்போது உள்ள காலத்தில் சமூக ஊடகங்களில் பயன்பாடுகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நடந்த வித்தியாசமான செயல்கள் மற்றும் வைரல் வீடியோக்கள் மிக எளிதாக மக்கள் மத்தியில் பரவி வருகின்றனர் அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் நபர் ஒருவர் “ரஸ்ஸலின் வைப்பர்” என்ற உலகிலேயே அதிபயங்கரமான விஷத்தன்மை உடைய பாம்புடன் மருத்துவமனைக்குச் சென்றதால் அங்குப் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த கொடிய விஷமுடைய பாம்பை பிரகாஷ் மண்டல் என்ற நபர் ஒருவர் தனது கைகளில் பிடித்து தனது கழுத்தில் போட்டவாறு மருத்துவமனைக்குச் சென்றதால் அங்குள்ள மருத்துவர்கள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் அதிர்ச்சியில் இருந்துள்ளனர்.

இந்த பிரகாஷ் மண்டல் என்ற நபரை ரஸ்ஸலின் வைப்பர் வகை இந்த பாம்பு கடித்ததால் கடித்த அந்த பாம்பையும் தனது கையில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அணுகியுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் புயல் போலப் பரவி வருகிறது.

தனது அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற பிரகாஷ் மண்டல் விஷப் பாம்பை அதன் வாயால் பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வேஷ்டி அணிந்தபடியே பாம்பையும் வைத்தபடி சென்றதால் அங்குள்ள மருத்துவர்கள் இவருக்குச் சிகிச்சை அளிக்கப் பயந்துள்ளனர். மருத்துவமனையே திகைத்து நின்றநிலையில் நோளியாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு ஒருநபர் இவரை ஒதுக்குப்புறமான இடத்தில் அழைத்துச் சென்றபடி இந்த வீடியோவில் இருக்கிறது.

அந்த நபரின் கையிலிருந்து பாம்பு வந்துவிட்டால், எதுவும் நடக்கலாம் என்று பலரும் பயந்து தூரத்தில் நின்றவாறு உள்ளனர். இதன் பிறகு சிகிச்சைக்காக வந்த மருத்துவர்கள் பாம்பைத் தொடர்ந்து கையில் வைத்திருந்தால் எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்ன கோணத்தில் பாம்பை விடும்படிசெய்துள்ளனர். அந்த நபருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டனவா என்று உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.

இதையும் படிங்க :Viral Video: சுற்றுலா பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியான பயணிகள்..!

இந்த ரஸ்ஸலின் வைப்பர் பாம்பு என்பது விபெரிடே என்ற பாம்பு வகை குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த நிலப்பரப்பு ஊர்வன வகையில் ஒன்றாகும் . இது இந்தியாவிலிருந்து பிற பகுதிகளான தைவான் மற்றும் ஜாவா வரை பெரும்பாலும் திறந்த வெளியில் இடங்களைப் பரவலாகக் காணப்படும்.

இந்த பாம்பு ஒரு மனிதனைக் கடித்தால் அந்த நபர்களை மரணத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் வகையில் கொடிய விஷமுடையதாக இருக்கும். இந்த பாம்புகள் பெரும்பாலும் விவசாய நிலங்களை அதிகமாகக் காணப்படும். இந்த பாம்பின் கடியினால் வருடத்திற்கு ஆயிரக்கணக்கில் மனிதர்கள் இறந்துள்ளனர்.

இதையும் படிங்க :Viral Video : கன்றுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ..!

 

வீடியோ குறித்து நெட்டிசன்கள் கருத்து..!

இந்த வீடியோவை குமார் மனிஷ் என்ற எக்ஸ் இணையதள பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் “இந்த வீடியோ பாகல்பூரிலிருந்து எடுக்கப்பட்டது. பாம்பு கடித்த பிறகு, அந்த நபர் அதை தன்னுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்து இனத்தை அடையாளம் காண உதவினார், பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை முறை திருப்திகரமாக இல்லை. என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க :Viral Video : பெண் மீது விழுந்த தண்ணீர் தொட்டி.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் எக்ஸ் பயனர் “கடித்த பாம்பை அடையாளம் காணப் பாதிக்கப்பட்டவருக்கு ரஸ்ஸல் விரியன் பாம்பு கிடைத்தது. இந்தியாவின் பீகாரிலிருந்து. படுக்கை வசதி இல்லாததால், தரையில் படுத்து, சிகிச்சைக்காகக் காத்திருக்கின்ற அவலமான நிலையில் பீகார் உள்ளது” என்றும் மற்றொருவர் அண்ணே, இந்த ரஸ்ஸல் வைப்பர் மிகவும் விஷமுள்ள பாம்பு.

உடனடியாக ஊசி போட்டால், அந்த நபர் காப்பாற்றப்படுவார், ஆனால் அந்த பகுதி வீங்கி, பின்னர் அந்த பகுதியைத் துண்டிக்கப் படும் நிலையாகிவிடும் என்றும் தங்களின் அனுபவத்தையும் மூன்றாவது நபர் இந்தியா ஆரம்பநிலைக்கானது அல்ல.

இந்த மாதிரியாகப் பல நபர்கள் பாம்பு கடித்தது, அவர்கள் பாம்பைக் கடித்து தன்னுடன் மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்” என்றும் தங்களின் கருத்துக்களை இந்த பதிவின் கீழ் தெரிவித்துவருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க :Viral Video: வேற லெவல்… அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ!

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்