Viral Video : வளர்ப்பு நாய்க்கு 4 சவரன் தங்க செயின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | Woman presented 33 grams gold chain to her pet dog on his birthday | TV9 Tamil

Viral Video : வளர்ப்பு நாய்க்கு 4 சவரன் தங்க செயின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Updated On: 

09 Jul 2024 14:34 PM

Dog Birthday Present | மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பூச் இண வகை நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். டைகர் என பெயர் சூட்டப்பட்ட ஆந்த நாயை அவர் மிகவும் பாசத்துடன் பராமரித்து வருகிறார். இந்நிலையில் டைகரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர், சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான 33 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலையை பரிசளித்துள்ளார்.

Viral Video : வளர்ப்பு நாய்க்கு 4 சவரன் தங்க செயின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Follow Us On

மும்பை பெண்ணின் நெகிழ்ச்சி செயல் : மனிதர்களுக்கும் செல்ல பிராணிகளுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. செல்ல பிராணிகள் மீது கொண்ட அதீத அன்பு மற்றும் பாசத்தினால் அதன் உரிமையாளர்கள் அவற்றை தங்களது வீட்டின் உறுப்பினராகவே மாற்றிவிடுகின்றனர். செல்லப்பிராணிகளுக்கென தனி அறை, உடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் என குழந்தைகளை கவனித்துக்கொள்வதை போலவே பராமரிக்கின்றனர். அதுமட்டுமன்றி மருத்துவம், உணவு என அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அப்படி தான் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்லப்பிராணி மீதான அளவு கடந்த அன்பால் அதற்கு சுமார் 2.5 லட்சம் மதிப்பில் தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார். பெண்ணின் செல்லப்பிராணி கழுத்தில் தங்க சங்கிலியுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்த நாள் பரிசாக தங்க சங்கிலியை பரிசளித்த பெண்

மும்பையை சேர்ந்த சரிதா சல்த்னா என்ற பெண், பூச் வகை நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதற்கு டைகர் என பெயர் சூட்டி மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். அதன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ள அவர், அதற்கு பரிசு வழங்க மும்பையில் உள்ள அணில் நகைக்கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 33 கிராம் எடையுள்ள சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை தனது நாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். தனது செல்லப்பிராணியின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த தங்க சங்கிலியை பரிசளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோவை பதிவு செய்த நகைக்கடை நிர்வாகம் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் இதுதான் மனிதர்களுக்கு விலங்குகளுக்குமான பிரிக்க முடியாத பந்தம் என குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவிடப்பட்டதை அடுத்து மிகவும் வேகமாக வைரலாக தொடங்கியது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

இந்த வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களையும் செல்லப்பிராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். உங்கள் செல்லப்பிராணி மீதான உங்களது அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் அன்புக்கு 2 கால்களா 4 நான்களா என்பது அவசியமில்லை என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடிய ஆராய்ச்சியாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

செல்லப்பிராணிக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, கருவுற்ற செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்துவது என பல சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன. இந்நிலையில் செல்லப்பிராணிக்கு தங்க சங்கிலி அணிவித்த உரிமையாளரின் பாச செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories
Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : தாசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version