15 August 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.
சாவித்திரி கதாப்பாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.
தற்போது சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டுள்ள கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க தனக்கு ஆசை எனவும், அவ்வப்போது கதை எழுதுவேன் என்றும் கூறியுள்ளார்.