சினிமாவில் இந்த பாகுபாடு வருத்தம் அளிக்கிறது – நடிகை ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா.

இந்தியில் ஜான் ஆப்ரஹாம் மற்றும் நர்கீஸ் பக்ரீஸ் தயாரித்த ‘மெட்ராஸ் கபே’ படத்தில் சிறிய ரோலில் நடித்ததன் மூலம் சினிமவில் அறிமுகமானார் ராஷி கண்ணா.

இந்த படத்தில் ராஷி கண்ணாவிற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், தென்னிந்திய சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.

ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் தனது முதல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்துவிட்டார்.

அதனை தொடர்ந்து அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வரும் ராஷி கண்ணா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் சினிமாவில் இருக்கும் பாகுபாடு குறித்து நடிகை ராஷி கண்ணா பேசியுள்ளார்.

சினிமாவில் சம்பள விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் உள்ளன. காலம் மாறும்போது அதிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என ராஷி கண்ணா தெரிவித்துள்ள்ளார்.