தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி!

கடந்த 2010-ம் ஆண்டு ‘ஜும்மாண்டி நாடம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் டாப்ஸி.

‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி அதனை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வைராஜா வை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து டாப்ஸி தெலுங்கிலும், இந்தி மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தினார்.

பிங், கேம் ஓவர்,ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் உள்ளிட்டப் படங்களின் மூலம் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி வருகிறார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் டாப்ஸி.

தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 14 ஆண்டுகளை கடந்து விட்டேன்.

இந்த நிலைக்கு வர எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறினேன். எனது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

NEXT: ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 க்ரைம் திரில்லர் படங்கள்!