23 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
கருவுற்ற பெண்கள் பொதுவாக பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது என சொல்வார்கள், இதனால் கரு வளர்ச்சி தடைப்படும் என கூறப்படுவதுண்டு
ஆனால் உண்மையில் பப்பாளி பழத்தை அளவாக சாப்பிடலாம். பப்பாளி காய் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பப்பாளிக்காயில் இருக்கும் ஒரு சில என்சைம்கள் கருவில் இருக்கும் குழந்தையின் வள்ர்ச்சியை தடுக்கும், கருகலைப்புக்கு வழிவகுக்கும்
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, பீடா கரோடின், ஆன்ட்டி ஆக்சிடென்ட். பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
பழுத்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கருவுற்ற பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் இது நிறைந்துள்ளது. இது கரு வளர்ச்சியை மேம்படுத்தும்
ஆனால் ஒரு பழத்தை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 2 அல்லது 3 நீள துண்டுகள் எடுத்துக்கொண்டால் பாதுகாப்பானது