08 September 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் தீபிகா படுகோன்.
அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் அவர் கோச்சடையான் படத்திலும் நடித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்த தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
அதனையொட்டி அவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.