11 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த நிலையில் சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என கூறப்படுகிறது.
காரமான உணவுகளை சாப்பிட்டால் உணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே காரமான உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது எரிச்சலை மேலும் அதிகரிக்கும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும். இதன் காரணமாக கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது குடல் புண்ணை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பழச்சாறு குடித்த உடனே தண்ணீர் குடிப்பது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
கார்பனேட்டட் பானங்கள் குடித்த உடனே தண்ணீர் குடிப்பது வயிற்று வீக்கத்தை ஏற்படுத்தும்.
பால் குடித்தவுடன் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும்.
சூப் குடித்த உடன் தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.