15 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து 1/4 டீஸ்பூன் காலை, மாலை என சர்க்கரை சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை தீரும்.
இஞ்சியைத் தோல் நீக்கி சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.
5 பல் பூண்டை 100 மில்லி பாலில் போட்டு சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பூண்டை மசியச் செய்து தினமும் இரவில் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் பெருங்காயம், 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் குடித்தால் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை நீங்கும்.
வாய்விளங்கம் பொடியை 2-4 கிராம் அளவு பாலில். கலந்து கொடுக்க சிறுவர்களுக்கு உண்டாகும் வாயுத்தொல்லை நீங்கும்.
புதினா இலையைக் குடிநீராகச் செய்து 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வாயு, அதனால் ஏற்படும். வயிற்று வலியும் நீங்கும்.