இணையத்தில் வைரலாகும் நடிகர் துல்கரின் சிறுவயது போட்டோ

20 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கேரள மாநிலம் கொச்சியில் 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி துல்கர் சல்மான் பிறந்துள்ளார்.

பிறப்பு

மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார்.

பான் இந்திய நடிகர்

சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக பேரி ஜான் ஆக்டிங் ஸ்டுடியோவில் மூன்று மாத நடிப்புப் படிப்பை படித்துள்ளார்.

நடிப்புப் படிப்பு

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘செக்கண்ட் ஷோ’ படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் துல்கர்.

அறிமுகம்

அதனை தொடர்ந்து வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ ரசிகர்களின் மனதில் துல்கருக்கு நீங்காத இடத்தைக் கொடுத்தது.

உஸ்தாத் ஹோட்டல்

துல்கரின் நடிப்பில் வெளியான ஏபிசிடி, நீலாகாஷம் பச்சைக்கடல் செவ்வண்ண பூமி, பேங்களூர் டேய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹிட் படங்கள்

2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் துல்கர் சல்மான்.

தமிழ் அறிமுகம்

அதனைத் தொடர்ந்து  மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி,தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றார் துல்கர்.

தமிழ் ரசிகர்கள்

தற்போது தெலுங்கில் ‘காந்தா’ என்ற படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

காந்தா

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயது புகைப்படம்