04 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
முகத்திற்கு அதிக முறை சோப்பு போடுவது, குளிப்பது உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சோப்பு போன்ற ரசாயன பொருட்கள் முகத்தில் இருக்கும் எண்ணெயை நீக்கிவிடும். இதனால் மிக எளிதாக சருமம் வறண்டுபோகும் ஆபத்து உள்ளது.
அடிக்கடி முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் முகத்தில் வெள்ளை திட்டுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிகப்படியான சுத்தம் சருமத்தில் உள்ள உற்பத்தி துளைகளை அடைக்கிறது. இதன் காரணமாக முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது.
முகத்தில் அதிகப்படியான சோப்பு போடுவதன் மூலம் அது முகத்தில் உள்ள கொலாஜன்களை சிதைத்து விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
முகத்தில் அதிகப்படியான சோப்பு பயன்படுத்துவன் மூலம் சருமத்தில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
முகத்தில் அதிகப்படியான சோப்பு பயன்படுத்திய பின் சூரிய ஒளியில் சென்றால் முகத்தில் சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.