இந்தியாவில் உள்ள பிரமிப்பூட்டும் ரயில் பாலங்கள்...

5 OCTOBER2 2024

Pic Credit - Pinterest

Author Name : Mohamed Muzammil S 

பாம்பன் பாலம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த பாலம் 1914 ஆண்டு கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் கடல் பாலமாகும்.

வேம்பநாடு பாலம்

கேரள மாநில கொச்சியில் அமைந்துள்ள இந்த பாலம் ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் நீளமான ரயில் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

செனாப் பாலம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. இது உலகிலேயே மிக உயரமான வளைவு ரயில் பாலம்.

ஜுவாரி பாலம்

கொங்கன் ரயில்வே பாலம் என்று அழைக்கப்படும் இது மிகப்பெரிய கேபிள் இணைப்பு பாலமாகும். இது கோவாவில் அமைந்துள்ளது.‌

ஷராவதி பாலம்

கர்நாடக மாநிலம் ஹொன்னவரில் அமைந்துள்ளது. தேசிய அளவில் சிறந்த பாலத்திற்கான இறுதி இரண்டாம் இடம் பெற்றது.

ஜூபிலி பாலம்

மேற்கு வங்கத்தில் ஹூக்ளி ஆற்றில் மீது கட்டப்பட்டிருக்கிறது. விக்டோரியா மகாராணியின் பொன் விழாவின்போது திறக்கப்பட்டது.

போகி பீல் பாலம்

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டது. இது சாலை மற்றும் ரயில் போக்குவரத்து ஒன்றாக இருக்கும் பாலங்களில்‌ மிக பெரியதாகும்.