18 வயதிலேயே அந்தக் கொடுமை… இஷா கோபிகர் வேதனை

சினிமாவில் அறிமுகமான நாளில் இருந்தே பல்வேறு பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

1997-ம் ஆண்டு வெளியான W/o வி. வர பிரசாத் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இஷா கோபிகர்.

1998-ம் ஆண்டு சந்திரலேகா என்ற தெலுங்கு படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானார் இஷா.

தமிழில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக நெஞ்சினிலே படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

காதல் கவிதை, என் சுவாச காற்றே, நரசிம்மா, அயலான் படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில் சினிமாவில் தான் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

நான் 18 வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். அப்போது இருந்தே பாலியல் தொல்லையை சந்தித்தேன்.

ஒரு நடிகர், டிரைவர் இல்லாமல் தனியாக வந்து தன்னை சந்திக்கும்படி அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. அந்த நடிகர் வேறு யாருமல்ல. இந்தி பட உலகில் அந்த சமயத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர். என்று தெரிவித்துள்ளார்

NEXT: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!