மார்பிங் போட்டோ… நடிகை கேப்ரியல்லா சொன்ன சோக சம்பவம்

விஜய் டிவியின் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சின்னத்திரையில் காலடி வைத்தார் நடிகை கேப்ரியல்லா. அதில் டைட்டிலையும் வென்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 C என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் கேப்ரியல்லா.

வெள்ளித்திரையில் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்தார் கேப்ரியல்லா.

பின்னர் சமுத்ரகனியின் அப்பா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனைத்தைப் பெற்றார் கேப்ரியல்லா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் கேப்ரியல்லா.

குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த கேப்ரியல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் நாயகி அந்தஸ்தைப் பெற்றார்.

விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிக்க இருக்கிறார் கேப்ரியல்லா.

நடிகை கேப்ரியல்லா சிறுவயதில் பாலியல் ரீதியாக தான் அனுபவித்த வலிகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நான் 10ம் வகுப்பு படித்த நேரத்தில் எனது புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள்.

இதனால் 3 நாட்கள் நான் பள்ளிக்கு செல்லவில்லை, பள்ளியில் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

அந்த சமயம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன், அதில் இருந்து வெளியே வர எனக்கு கொஞ்ச நாட்கள் ஆனது என்று கேப்ரியல்லா கூறியிருக்கிறார்.