நடிகை ரித்து வர்மா குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

21 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நடிகை ரித்து வர்மா 1990 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்

ஆந்திர அழகி

பொறியியல் படித்துள்ள இவர் ஹைதராபாத் அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலம் பிரபலமானார்

அழகிப்போட்டி

வர்மா ரோஸ் என்ற பெயரில் அனுகோகுண்டா என்ற குறும்படத்தில் முதலில் நடித்தார். இது பல விருதுகளை வென்றது

குறும்படம்

தெலுங்கில் 2013ல் வெளியான பாட்ஷா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்

சினிமா

அதே ஆண்டில் பிரேம இஷ்க் காதல் என்ற படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்

ஹீரோயின்

2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் அறிமுகமான அவருக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் திருப்புமுனையாக அமைந்தது

தமிழ் சினிமா

தொடர்ந்து நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட தமிழ் படங்களில் ரித்து வர்மா நடித்துள்ளார்

அடுத்தடுத்து வாய்ப்பு