தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்

நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்றுவந்த நடிகர் பிரதீப் விஜயன்.

2 நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் காவல்துறையிடம் நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது குளியறையில் பிரதீப் விஜயன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். குளியலறையில் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகாத நிலையில், வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார். அவருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் மற்றும் தலைச்சுற்றல் பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகின்றது.

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான பிரதீப் கே விஜயன், இரண்டு நாட்களாக வீட்டுக்குள் இறந்து கிடந்து பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

NEXT: இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா  – உமாபதி வெட்டிங் போட்டோஸ்