04 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ரத்த சோகை உள்ளவர்கள் காய்கறி, கீரை போன்ற உணவுகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல பழ வகைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ரத்த சோகையை போக்க மீன், கறி, கோழிக்கறி, கோதுமை, பீன்ஸ், கீரை உள்ளிட்ட உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ரத்த சோகையை போக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பேரிச்சை உள்ளிட்ட பழங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பால், காபி, டீ உள்ளிட்ட பொருட்களை ரத்த சோகை உள்ள நபர்கள் தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும்.