17 August 2023
Author : Aarthi
Pic credit - Pixabay
துளசி இலையில் பொதுவாக மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. வெண் துளசி, கருந்துளசி, கற்பூர துளசி, முள் துளசி என பலவகைப்படும்
துளசி இலையை தொடர்ந்து உட்கொள்வதால் காய்ச்சல், சளி, தலைவலி, மூக்கடைப்பு உள்ளிட்டவை நீங்கும்
குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு அருமருந்து துளசி
குடல் பிரச்சனை நீக்கி குடலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்
துளசி இலை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கி, கிருமி நாசினியாகவும் செயல்படும்
மன அழுத்தம், நரம்பு கோளாறு, நினைவாற்றல் பிரச்சனைகள் தீர துளசி இலை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்
துளசி இலை சாறு எடுத்து இஞ்சி தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி தொல்லை நீங்கும்