28 OCT 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்காவிட்டால் கடுமையான விளைவுகள் சந்திக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உப்பு பல வகை என்றாலும் நாம் உணவில் சேர்க்கும் உப்பு என்பது சோடியம் குளோரைய்டு ஆகும்.
அதிக உப்பால், இதய நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு ஏற்படக்கூடும்
உலக சுகாதார அமைப்பின் படி ஒரு நாளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு வெறும் 5 கிராம் தான்
உலகில் சீன மக்கள் தான் அதிகப்படியான உப்பு அதாவது ஒரு நாளைக்கு 10 கிராம் உப்பு எடுத்துக்கொள்வதாக ஆய்வில் கூறப்படுகிறது
உணவகங்களில் இருக்கும் உணவில் அதிகப்படியான உப்பு இருப்பதால், மருத்துவர்கள் வீட்டு உணவையே சாப்பிடுமாறு அறிவுறுத்துகிறார்கள்.
உடலில் இருக்கும் உப்பை வடிகட்டுவது சிறுநீரகத்தின் வேலை, அதிக உப்பு சாப்பிடுவதால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் ஏற்படும்