27 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
நாம் சாப்பிடும் உணவு, உமிழ்நீருடன் சேர்ந்து வயிற்றுக்குள் போகும் போது செரிமான கோளாறுகள் வராது.
வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்தால் அது ஒரு சில நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இதனை ஹைப்பர் சலைவேஷன் என கூறுவார்கள்.
இதனால் ஒரு சிலருக்கு சாப்பிடுவதும், பேசுவதும் கடினமாக மாறும். மேலும் தோல் ரீதியான பிரச்சனைகளும் வரும்
ஒரு ஆரோக்கியமான மனிதரின் உமிழ்நீர் சுரப்பில் சராசரி 0.75 முதல் ஒரு லிட்டர் வரை இருக்குமாம்.
வாயில் சுரக்கும் உமிழ்நீர் புளிப்பு தன்மையுடன் இருந்தால் இரைப்பை கோளாறு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கும்
அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு என்பது கல்லீரல் நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்
தொண்டை புண் அல்லது வாய்வழி தொற்றினால் கூட அதிக உமிழ் நீர் சுரக்கக்கூடும்