27 October 2024
Pic credit - freepik
Author : Mukesh
அடிக்கடி தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.
சர்க்கரை நோயாளிகள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாம் சாப்பிடும் சில பழங்கள் இரத்த சர்க்கரையை தூண்டும். எனவே, சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், சர்க்கரையானது நம் உடலில் இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
திராட்சையில் உள்ள இயற்கையான சர்க்கரை இரத்த சர்க்கரையின் சமநிலையை சீர்குலைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் முலாம்பழத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். இது உடலின் இன்சுலின் அளவைக் கெடுக்கும்.
பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழங்களில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.