07 May 2024

டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னைகள் இருக்கா?

நமது நாளை தினமும் ஒரு கப் டீயில் தொடங்குவது வழக்கம். ஒரு நேரம் டீ குடிக்காவிட்டாலும் பலருக்கு தலைவலி ஏற்படுகிறது.

அந்த அளவிற்கு நாம் டீக்கு அடிமையாகி உள்ளோம். இப்படி அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.

எனவே, டீ குடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு கப் டீ குடிப்பதே போதுமானது.

அதேபோல, டீயை மீண்டும் மீண்டும் சூடாக்கி குடிக்கும்போது விஷமாக மாறும். அதில் உள்ள காஃபின் அளவு அதிமாகி, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

டீயில் அதிகப்படியான களோரிகள் இருப்பதால் உடை எடையை அதிகரிக்கலாம். எனவே, டயட்டில் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

டீ அடிக்கடி குடிப்பதால் செரிமான பிரச்னைகள், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

எனவே, அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக பழச்சாறுகளை அருந்தலாம்.

NEXT : கோடையில் மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?