Iran Israel War: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டிய டிரம்ப்.. 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லாவினர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர் பதற்றம்.. - Tamil News | admist iran and israel war former president donald trump given clue about nuclear power plant attakcs know more in detail | TV9 Tamil

Iran Israel War: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டிய டிரம்ப்.. 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லாவினர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர் பதற்றம்..

Published: 

05 Oct 2024 09:48 AM

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத அமைப்புகள், தளங்கள் மற்றும் பிற உபகரணங்களை குறிவைத்து, அமெரிக்க இராணுவம் நேற்று 12க்கும் மேற்பட்ட நிலைகளை தாக்கியது. யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்ததை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன்ர்.

Iran Israel War: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டிய டிரம்ப்.. 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லாவினர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர் பதற்றம்..

கோப்பு புகைப்படம்

Follow Us On

சமீபத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தான் நம்புவதாக அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் பேசிய முன்னாள் ஜனாதிபதி, ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோ பிடன் கேட்ட கேள்வியைக் குறிப்பிட்டார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் குறிவைக்கும் சாத்தியம் குறித்து, டிரம்ப் தன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ​​முதலில் அணுகுண்டு தாக்குதலைச் செய்யுங்கள், மீதமுள்ளவற்றைப் பற்றி கவலைப்படுங்கள் என்று தான் பதிலளித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலிடம் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர், இல்லையெனில் ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் இருந்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு பல வழிகள் உள்ளன. இராணுவ, பொருளாதார அல்லது அணுசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களும் இதில் அடங்கும். எவ்வாறாயினும், அமெரிக்கா போரை ஆதரிக்காது என்று தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறியிருந்தார்.

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத அமைப்புகள், தளங்கள் மற்றும் பிற உபகரணங்களை குறிவைத்து, அமெரிக்க இராணுவம் நேற்று 12க்கும் மேற்பட்ட நிலைகளை தாக்கியது. யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்ததை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன்ர்.

ஹவுதி கிளர்ச்சியாளர் நிலைகள் மீதான வான்வழித் தாக்குதலில் பிரிட்டனும் ஈடுபட்டதாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இந்த தாக்குதல்களில் பிரிட்டன் ஈடுபடவில்லை என்று பின்னர் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். ஹவுதியின் முக்கிய துறைமுக நகரமான ஹொடெய்டாவின் விமான நிலையம் மற்றும் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கதீப் இராணுவ தளத்தின் மீது ஏழு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க, இஸ்ரேல் மீண்டும் பெய்ரூட்டை இலக்கு வைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது மற்றும் லெபனானுக்கும் சிரியாவிற்கும் இடையிலான பிரதான சாலை இணைப்பை மூடியது. இஸ்ரேலின் குண்டுவீச்சு காரணமாக லெபனானில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவுக்குள் நுழையும் எல்லைப் புள்ளி இந்தப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் ஹிஸ்புல்லாவின் மத்திய உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் யாரேனும் கொல்லப்பட்டார்களா, இலக்கு யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கடந்த 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லா போராளிகளை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஹரியானாவில் தொடங்கியது வாக்குப்பதிவு.. 90 தொகுதிகள், 1031 வேட்பாளர்கள்.. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

லெபனானில் 10 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை அறிவித்தது. இதற்கிடையில், நேற்று ஹிஸ்புல்லா சுமார் 100 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவரான முகமது ரஷீத் ஸ்காஃபி ஒரு நாள் முன்னதாக பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் தகவல் தொடர்பு பிரிவில் பணிபுரிந்து வந்த ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட பயங்கரவாதியான ஸ்காஃபி, அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், பரபரப்பான மஸ்னா எல்லைக் கடவைக்கு அருகே சாலை இணைப்பைத் துண்டித்தது, கடந்த இரண்டு வாரங்களாக லெபனானில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவிற்குள் தப்பிச் சென்றுள்ளனர் என்று தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சொதப்பிய பேட்டிங்.. உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி!

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஹிஸ்புல்லாஹ் எல்லையில் இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல முயற்சிப்பதாகக் கூறியிருந்தார். ஹிஸ்புல்லா தனது ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை ஈரானில் இருந்து சிரியா வழியாக பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த அமைப்பு எல்லையின் இருபுறமும் முன்னிலையில் உள்ளது. சிரியாவில், ஹிஸ்புல்லா சிரிய அதிபர் பஷார் ஆசாத்தின் படைகளுடன் போரிட்டு வருகிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version