Elon Musk: மைண்ட் வைரஸால் மகனை இழந்தேன்.. நொந்துபோன எலான் மஸ்க்.. என்ன ஆச்சு?
Vivian Musk: சேவியருக்கு சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தபோது பயன்படுத்தப்பட்ட மருந்துகள் உண்மையில் கருத்தடை மருந்துகள் என தெரிவிக்கப்படவில்லை. அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என சொல்லவில்லை. இதனால் நான் என் மகனை இழந்து விட்டேன். எனது மகனை Woke mind virus ஆல் இழந்து விட்டதாக குறிப்பிட்டார்கள்.
எலான் மஸ்க்: உலக தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், அவரின் செயல்பாடுகள் காரணமாக இன்றைய இளம் தலைமுறையினரிடம் கூட நன்கு பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்கிறார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இடையே நடைபெறும் பாலின மாற்று அறுவை சிகிச்சைப் பற்றி பேசினார். அப்போது திருநங்கையாக மாறிய அவரின் மகன் சேவியர் பற்றி பல விஷயங்களை கூறினார். இந்த நினைவுகளைப் பகிரும்போது எப்போதும் ஜாலியாக இருக்கும் எலான் மஸ்க் பேச முடியாமல் சோகத்தில் திணறிப்போனார். இதன் வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், “ எனது மூத்த பையன்களில் ஒருவரான சேவியர் பாலின மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எந்த புரிதலும் வருவதற்கு முன்பே இது நடந்து முடிந்து விட்டது. அப்போது கொரோனா காலக்கட்டமாக இருந்தது. இதனால் எனக்கு நிறைய குழப்பம் ஏற்பட்டது. கையெழுத்து போடவில்லை என்றால் தான் தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியதால் நான் கையெழுத்திட்டேன்.
இந்த விஷயம் நம்பமுடியாத அளவிற்கு தீமை நிறைந்தது. இதை ஊக்குவிக்கும் நபர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். சேவியருக்கு சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தபோது பயன்படுத்தப்பட்ட மருந்துகள் உண்மையில் கருத்தடை மருந்துகள் என தெரிவிக்கப்படவில்லை. அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என சொல்லவில்லை. இதனால் நான் என் மகனை இழந்து விட்டேன். எனது மகனை Woke mind virus ஆல் இழந்து விட்டதாக குறிப்பிட்டார்கள். இதனைத் தொடர்ந்து முற்போக்கான சிந்தனையான விஷயங்களை குறிப்பிடும் Woke mind virus ஐ எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என நான் முடிவு செய்தேன்” என தெரிவித்தார்.
சேவியர் மஸ்க்
எலான் மஸ்க் மற்றும் அவர் முதல் மனைவியான ஜஸ்டின் மஸ்க்கிற்கும் 2004 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் ஒருவர் தான் சேவியர் மஸ்க். 2022ஆம் ஆண்டு தன்னை திருநங்கையாக அறிவித்த சேவியர், தனது பெயரை விவியன் மஸ்க் என மாற்றம் செய்துக் கொண்டார். பின்னர் நான் இனி எந்த வகையிலும், வடிவத்திலும் எனது தந்தை எலான் மஸ்க் உடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். தனது மகன் விஷயத்தில் சட்டத்திட்டங்களும் எலான் மஸ்கிற்கு எதிராக அமைந்ததில் கடும் அதிருப்தி கொண்ட அவர் தன் நிறுவனங்களை எல்லாம் கலிஃபோர்னியாவில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.