5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Shocking News : விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்.. கோடாலியால் கால்களை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

Father cut off Daughter's legs | பாகிஸ்தானை சேர்ந்த சோபிய படூல் ஷா என்ற பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் அவரை தினமும் கொடுமை படுத்தி வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். கராச்சியில் தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் தனியாக தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்த பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Shocking News : விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்.. கோடாலியால் கால்களை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Jul 2024 12:47 PM

அதிர்ச்சி சம்பவம் : உலகம் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறினாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறைகள் என பல்வேறு விதமான பிரச்னைகளால் பெண்கள் சிதரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமூதாய கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் தினந்தோறும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் தான் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. விவாகரத்து பெறுவதற்காக விண்ணப்பித்த பெண்ணின் கால்கள் வெட்டப்பட்ட கொடூர சம்பவம் தான் அது.

கொடுமைக்கார கணவனிடம் சிக்கித்தவித்த பெண்

பாகிஸ்தானை சேர்ந்த சோபிய படூல் ஷா என்ற பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் அவரை தினமும் கொடுமை படுத்தி வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். கராச்சியில் தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் தனியாக தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்த பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது குறித்து சோபியா பலமுறை தனது பெற்றோரிடன் கூரியும் அதை அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக கடும் மன உலைச்சலுக்கு ஆளான சோபியா, இனியும் திருமண உறவில் இருக்க வேண்டாம் என்ற முடிவில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

கோடாலியால் கால்களை வெட்டிய தந்தை

சோபியா விவாகரத்துக்கு விண்ணப்பித்த தகவல் அறிந்த அவரது தந்தை, அதனால் குடும்ப மரியாதை பாதிக்கப்படும் என்று நினைத்துள்ளார். மேலும் விவாகரத்தை வாபஸ் பெறுமாரும் சோபியாவிடம் கூறியுள்ளனர். ஆனால் சோபியா வாபஸ் வாங்க மறுக்கவே, அவரின் தந்தை உறவினர்களின் உதவியுடன் கோடாலியை கொண்டு சோபியாவின் கால்களை வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சோபியா துடித்துள்ளார். பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அவரை மீட்டு சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். தற்போது சோபியா நிரந்தரமாக நடக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : Crime: விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக குத்திக்கொலை.. பெங்களூருவை அதிர வைத்த கிரைம்!

உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சோபியாவின் தந்தை முஸ்தாக் ஷாவை கைது செய்துள்ளனர். மேலும் இந்த  சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்

சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களையும், அநீதிகளையும் கட்டுப்படுத்துவதற்காக பலவேறு சட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததற்காக பெற்ற தந்தையே மகளின் கால்கலை கோடாலியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Chennai Crime: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் விபரீத முடிவு.. சென்னையில் பரபரப்பு!

Latest News