Iran Israel War: நாளை மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டம்.. ப்ளூபிரிண்ட் உடன் ஈரான் தயாராக இருப்பதாக FBI எச்சரிக்கை..
கடந்த செவ்வாய்கிழமை, ஈரான் இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீது டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. ஏப்ரலுக்குப் பிறகு தெஹ்ரானில் இருந்து இது இரண்டாவது நேரடி தாக்குதல் ஆகும், அதன் பிறகு ஈரான் மீது கடுமையான இஸ்ரேலிய எதிர்வினை எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் எந்தவொரு நாடும் தனது நகரங்கள் மற்றும் குடிமக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளாது என்றும் யூத அரசும் அவ்வாறு செய்யாது என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.
ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் எப்போது, எப்படி பதிலடி கொடுக்கும் என்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ள நிலையில், ஈரானின் இந்த தாக்குதலை வரலாற்றில் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலாக இருக்கும் என்றும் நெதன்யாகு வர்ணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரதமர் நெதன்யாகு, ஈரான் இரண்டு முறை நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை எங்கள் பிரதேசம் மற்றும் எங்கள் நகரங்கள் மீது வீசியுள்ளது, இது வரலாற்றில் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களில் ஒன்றாகும். ஈரானின் உச்ச தலைவர் கமேனி வெள்ளிக்கிழமை இஸ்ரேலை வெளிப்படையாக அச்சுறுத்திய நேரத்தில் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வந்தது.
கடந்த செவ்வாய்கிழமை, ஈரான் இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீது டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. ஏப்ரலுக்குப் பிறகு தெஹ்ரானில் இருந்து இது இரண்டாவது நேரடி தாக்குதல் ஆகும், அதன் பிறகு ஈரான் மீது கடுமையான இஸ்ரேலிய எதிர்வினை எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் எந்தவொரு நாடும் தனது நகரங்கள் மற்றும் குடிமக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளாது என்றும் யூத அரசும் அவ்வாறு செய்யாது என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறினார். இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும், தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேலுக்கு கடமையும் உரிமையும் உள்ளது, நாங்கள் அவ்வாறு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: “முதல்ல ஈரானில் உள்ள அணு ஆயுத தளத்த தாக்குங்க” இஸ்ரேலுக்கு ஐடியா கொடுத்த டிரம்ப்!
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்போது நெதன்யாகுவின் உத்தரவு கிடைத்தவுடன் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈரான் உச்ச தலைவர் கமேனி வெள்ளிக்கிழமை தனது உரையில் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை பாராட்டினார், மேலும் இந்த சண்டையில் இஸ்ரேல் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்றும் கூறினார். இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால், இன்னும் பலத்துடன் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் அலி கமேனி கூறினார்.
ஏவுகணைத் தாக்குதலை ஈரானின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக நெதன்யாகு விவரித்தார், இதன் கீழ் இஸ்ரேலுக்கு எதிரான போரை பல முனைகளில் அதிகரிக்க விரும்புகிறது. இதற்காக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் உட்பட முழு மத்திய கிழக்கிலும் அதன் 6 பினாமிகளைப் பயன்படுத்துகிறது.
My message to Macron >> pic.twitter.com/BHyh0Fso19
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) October 5, 2024
ஈரான் தலைமையிலான காட்டுமிராண்டித்தனமான சக்திகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது, அனைத்து நாகரிக நாடுகளும் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்க வேண்டும் என்றார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் சர்வதேச ஆதரவை அவர் கோரினார் மற்றும் இஸ்ரேலுடன் ஒன்றிணைவது குறித்து பேசினார்.
Also Read: சூடுபிடிக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. யாருக்கு வெற்றி?
இதற்கிடையில் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலுக்கு ஈரானிய பினாமி அமைப்புகள் தயாராகி வருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக ஏமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் லெபனானை சென்றடைந்துள்ளதாகவும், ஈரானின் பினாமி தாக்குதல்களுக்கான வரைபடத்தை ஈரான் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த தாக்குதல்களுக்கு ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உத்தரவு மட்டுமே காத்திருக்கிறது. இருப்பினும், மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதன் மூலம் தாக்குதல்களை முறியடிக்க இஸ்ரேல் திட்டம் வகுத்துள்ளது. அதேசமயம் எல்லையிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.