5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதலை நிபுணர்.. பிடிபட்டது எப்படி.. திடுக்கிடும் தகவல்கள்!

Shocking News | விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தனது நிபுணத்துவத்தால் உலக அளவில் புகழ் பெற்றார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். விலங்குகள் மீது மிகுந்த ஆர்வமும், அக்கரையும் கொண்டவராகவே அவர் தோன்றினார். ஆனால் அவர் மீது நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதலை நிபுணர்.. பிடிபட்டது எப்படி.. திடுக்கிடும் தகவல்கள்!
ஆடம் பிரிட்டன்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 13 Aug 2024 13:30 PM

ஆடன் பிரிட்டன் : பிரிட்டனை சேர்ந்தவர் உலக புகழ் பெற்ற முதலை நிபுணர் ஆடம் பிரிட்டன். விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தனது நிபுணத்துவத்தால் உலக அளவில் புகழ் பெற்றார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். விலங்குகள் மீது மிகுந்த ஆர்வமும், அக்கரையும் கொண்டவராகவே அவர் தோன்றினார். ஆனால் அவர் மீது நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் அப்படி என்ன செய்தார், அது வெளி உலகிற்கு தெரிய வந்தது எப்படி என்பதை பார்க்கலாம்.

விலங்குகளை இறக்கும் வரை சித்ரவதை செய்த ஆடம் பிரிட்டன்

ஆஸ்திரேலிய வடக்குப் பிரதேசத்திற்கான உச்சநீதிமன்றம், 53 வயதான ஆடம் பிரிட்டன் என்ற நபர், விலங்குகள் இறக்கும் வரை சித்ரவதை செய்து படம் பிடித்து அவற்றை புனைப் பெயரில் இணையத்தில் பகிர்ந்து வந்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Crime: 7 வயது மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… அதிர்ச்சி வாக்குமூலம்!

39 நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நிபுணர்

ஆஸ்திரேலியாவில் பல நாய்களை ஆடம் பிரிட்டன் பாலியன் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அவர் மொத்த 42 நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அவற்றில் 39 நாய்களை கொலை செய்துள்ளார். அதன்படி, விலங்குகளுடன் உடலுறவு கொள்ளுதல், மற்றும் விலங்கு வன்கொடுமை தொடர்பான 56 குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சகிக்க முடியாத குற்றங்களை செய்த ஆடம்

ஆடம் பிரிட்டனின் வீடியோவில் இருந்து துப்பு கிடைக்கும் வரை, இந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரமல் இருந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது பண்ணை வீட்டை சோதனையிட்ட போது கிடைத்த மடிக்கணினி மூலம் அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளன. அதன்படி, ஆடம் பிரிட்டன் செய்த குற்றங்கள் வெளியிட முடியாத அளவுக்கு கொடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கு குறித்த உண்மைகளை கேட்டு பொதுமக்கள் சிலர் தாங்க முடியாமல் வெளியேறியுள்ளனர். அந்த அளவுக்கு அவர் பல கொடூரமான செயல்களை செய்துள்ளார்.

இதையும் படிங்க : Wayanad Landslide : நிலச்சரிவு பாதிப்பு.. வங்கி கடன்களை தள்ளுபடி செய்து கேரளா வங்கி அறிவிப்பு!

10.5 ஆண்டுகள் சிறை விதித்த நீதிபதி

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, விலங்குகளை சித்ரவதை செய்து பிரிட்டன் அடைந்த மகிழ்ச்சி அருவருப்பானது என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரட்டனின் இந்த கொடூர செயல்களுக்கு, 10.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News