Python : பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப் பாம்பு.. ஷாக் சம்பவம்
இந்தோனேஷியாவில் பெண்ணை பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இது போன்ற சம்பவங்களை நடக்காமல் இருக்க அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணம் அருகே இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மனிதர்களை மலைப்பாம்பு இப்படி விழுங்கிய சம்பவங்களை சினிமாவில் மட்டுமே பார்த்து பழகிய மக்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இப்படிப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2017, 2018 மற்றும் 2023 ஆண்டுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read:vAmla: நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!
மத்திய இந்தோனேஷியா கலேம்பாங் கிராமத்தை சேர்ந்த ஃபரிதா என்ற 45 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென காணாமல்போன நிலையில், அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த கிராமத் தலைவர் சுர்தி ரோசியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பெண் தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் ஒரு நாள் முழுவதும் எங்கு தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேடுதல் முயற்சியை கைவிடாத கணவர், கிராம மக்களின் உதவியுடன் காட்டுக்குள் தேடியிருக்கிறார். அங்கு அவரது மனைவி பயன்படுத்தும் விவசாய கருவிகள் அப்பகுதியில் இருந்துள்ளன. அப்போது அந்த பகுதியில் வயிறு உப்பிய நிலையில் ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்ததை கண்டனர்.
Also Read: மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: 11 பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் என்ன?
இந்த பாம்பு ஃபரிதாவை விழுங்கியிருக்க கூடுமோ? என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அந்த பாம்பை அடித்து கொன்று மலைப்பாம்பின் வயிற்றை வெட்டினர். அப்போது அதன் வயிற்றில் ஃபரிதாவின் தலை உடனடியாகத் தெரிந்த நிலையில், பாம்பு வயிற்றுக்குள் ஃபரிதா முழு ஆடையுடன் காணப்பட்டார். இதனை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இது சம்பவம் பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏறக்குறைய 23 அடி நீளத்தில் பாம்பு தோட்டத்தில் படுத்து நகரமுடியாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுபோன்ற ராட்சத மலைப்பாம்பை நாங்கள் பார்த்தது இல்லை என்றும் கூறினார். இந்த தோட்டப் பகுதியில், குறைந்தபட்சம் 15 அடி நீளமுள்ள பாம்புகள்தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் 20 அடி நீளம் கொண்ட பாம்பு இப்படி மனிதனை விழுங்கும் அளவிற்கு இருக்கும் என்பது அதிர்ச்சியாய் இருக்கிறது என தெரிவித்தார். இது போன்ற சம்பவங்களை தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று அதிகாரிகள் கூறியுள்ளார்.