நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. 200 பயணிகளின் நிலை என்ன? திக் திக்!
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் குலுங்கியது. மூன்று நிமிடங்கள் விமானம் கடுமையாக குலுங்கியது. இதனால், அங்கிருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. குலுங்கிய அரை மணி நேரத்திற்குள் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், 30 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடுவானில் குலுங்கிய விமானம்: லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு SQ321 விமானம் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே மோசமான வானிலை காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது. மூன்று நிமிடங்கள் விமானம் கடுமையாக குலுங்கியது. விமானம் 31,000 அடி (9,400 மீட்டர்) உயரத்தில் விமானம் குலுங்கியதாக தெரிகிறது. இதனால், அங்கிருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. குலுங்கிய அரை மணி நேரத்திற்குள் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், 30 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
🚨🇸🇬🇹🇭BREAKING: 1 DEAD, 30 INJURED ON BOEING FLIGHT TO SINGAPORE
A Singapore Airlines Boeing 777 hit extreme turbulence that forced it to make an emergency landing at Suvarnabhumi Airport, Bangkok.
The aircraft was carrying a total of 211 passengers and 18 crew.
Source: BBC pic.twitter.com/VruJtfXAKT
— Mario Nawfal (@MarioNawfal) May 21, 2024
200 பயணிகளின் நிலை என்ன?
சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையின் அவசரக் குழுவினர் காயமடைந்த பயணிகளை விமானத்தில் இருந்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஓடுபாதையில் இருந்தனர். பின்னர், காயமடைந்த பயணிகளை மீட்டு அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூருக் போயிக் 777-300ER SQ321 விமானம் வழியால் கடுமையாக குலுங்கியது. மோசமான வானிலை காரணமாக விமானம் குலுங்கியது. உடனே, விமானம் பாங்காக் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில், ஒரு பயணி உயிரிழந்தார்.
இதனை நங்கள் உறுதி செய்கிறோம். இறந்தவரின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. காயம் அடைந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். பயணிகளுக்கு தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவானில் விமானம் குலுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Singapore Airlines flight #SQ321, operating from London (Heathrow) to Singapore on 20 May 2024, encountered severe turbulence en-route. The aircraft diverted to Bangkok and landed at 1545hrs local time on 21 May 2024.
We can confirm that there are injuries and one fatality on…
— Singapore Airlines (@SingaporeAir) May 21, 2024
Also Read : இஸ்ரேலை பரம எதிரியாக கருதிய ரைசி.. ஈரானின் அடுத்த அதிபர் யார்?