5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: கசினோவில் 4 மில்லியன் டாலர் வென்ற நபர்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில், ஒரு நபர் 4 மில்லியன் டாலர்களை வென்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். பெயரிடப்படாத நபர், அவர் பெரும் பரிசுத்தொகையை வென்றதால் அதிகளவு மகிழ்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற கேசினோவில் ஒரு மகிழ்ச்சியான சூழலுக்கு நடுவே இந்த சம்பவம் நடந்துள்ளது.

Watch Video: கசினோவில் 4 மில்லியன் டாலர் வென்ற நபர்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 24 Jun 2024 21:56 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில், ஒரு நபர் 4 மில்லியன் டாலர்களை வென்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். பெயரிடப்படாத நபர், அவர் பெரும் பரிசுத்தொகையை வென்றதால் அதிகளவு மகிழ்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற கேசினோவில் ஒரு மகிழ்ச்சியான சூழலுக்கு நடுவே இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 மில்லியன் டாலர் வென்ற அந்த நபர் சிறிது நேரத்திலேயே தரையில் சுருண்டு விழுந்துள்ளார். மகிழ்ச்சியான சூழ்நிலை சற்று நேரத்திலேயே சோகமாக மாறியது. அந்த நபர் கீழே விழுந்ததும் கசினோவில் இருக்கும் ஊழியர்கள் உடனடியாக அவருக்கு மருத்துவ உதவியை வழங்கினர். இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கீழே விழுந்த நபரை அங்கு இருக்கும் ஊழியர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை. பணமோசடி உட்பட சிங்கப்பூரில் சூதாட்டத் தொழிலுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் சமீபத்திய கூட்டு அறிக்கை, இந்த கவலைகளை எடுத்துக்காட்டியது, குற்றவியல் வருமானத்தை மோசடி செய்வதற்கான வழிவகைகளாக சூதாட்ட விடுதிகளின் கவர்ச்சி குறைவாக இருந்தாலும், கடுமையான மேற்பார்வையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Also Read:  பூமியை தாக்க வரும் ஆபத்து நிறைந்த விண்கல்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!

சூதாட்ட நிலையங்களால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் பணமோசடி நடவடிக்கைகளை விட ஒழுங்குமுறை மீறல்களுடன் தொடர்புடையவை என்று அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது இருப்பினும், ஆன்லைன் சூதாட்டத்தால் முன்வைக்கப்படும் குறிப்பிடத்தக்க சவால்களையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது, இது ஒரு இலாபகரமான மற்றும் நாடுகடந்த கவலையாக உள்ளது. சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத் தளங்களுடன் இணைக்கப்பட்ட $3 பில்லியன் பணமோசடி நடவடிக்கை போன்ற சமீபத்திய உயர்மட்ட வழக்குகள், சைபர் கிரைம் மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதில் சட்ட அமலாக்க முகமைகள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Also Read: உங்களை சுற்றி இன்று நடந்தது என்ன? ஓர் அலசல்..