ISRO SSLV D-3: நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்.. அதிகாலை 3.17 மணிக்கு தொடங்கும் கவுண்டவுன்..
SSLV என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்ட மூன்று-நிலை, குறைந்த விலை ஏவுகணை வாகனமாகும். SSLV-D1 மற்றும் SSLV-D2 பயணங்கள் முறையே ஆகஸ்ட் 2022 மற்றும் பிப்ரவரி 2023 இல் EOS-02 மற்றும் EOS-07 ஆகிய இரண்டு EO செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8 (EOS-8) ஆகஸ்ட் 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி மூலம் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த செயற்கைக்கோள் இன்று காலை ஏவப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடை நேர ஏற்பாடுகள் காரணமாக நாளை விண்ணில் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். மைக்ரோசாட்லைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை இந்த செயற்கைக்கோளின் முதன்மையான பணியாக இருக்கும்.
We are only 14 hours away from SSLV-D3 – #ISRO‘s third launch of 2024, placing 2 satellites into Low Earth Orbit!! 🚀
This is going to be the final developmental flight of SSLV, after which it will achieve operational status!
Check out our infographic to learn more 👇 pic.twitter.com/RQNEK6xYFy
— ISRO Spaceflight (@ISROSpaceflight) August 15, 2024
175.5 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு முதல் பேரிடர் மேலாண்மை வரை பல்வேறு களங்களில் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். இந்த விண்கலம், 475 கி.மீ உயரத்தில், ஒரு வட்டமான லோ எர்த் ஆர்பிட்டில், சுமார் ஒரு வருட காலம் செயல்பாட்டில் இருக்கும்.
SSLV என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்ட மூன்று-நிலை, குறைந்த விலை ஏவுகணை வாகனமாகும். SSLV-D1 மற்றும் SSLV-D2 பயணங்கள் முறையே ஆகஸ்ட் 2022 மற்றும் பிப்ரவரி 2023 இல் EOS-02 மற்றும் EOS-07 ஆகிய இரண்டு EO செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து நாளை காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் SSLV தொடரில் இது கடைசி செயற்கைக்கோளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி கவலை வேண்டாம் மக்களே..! கூடுதலாக பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..
EOS-08 மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் SiC UV டோசிமீட்டர் ஆகியவை அடங்கும். இந்த செயற்கைக்கோளுக்கான 6 மணி நேர கவுண்டவுன் நாளை அதிகாலை 3.17 மணிக்கு தொடங்குகிறது.