5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: சில்லென மாறிய சென்னை.. 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கே தெரியுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tamilnadu Weather Alert: சில்லென மாறிய சென்னை.. 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கே தெரியுமா?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 10 Oct 2024 08:21 AM
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பதிவாகி வரும் நிலையில் வட தமிழகத்தில் வறண்ட வானிலையே இருந்து வந்தது. வட கிழக்கு பருவ மழை தொடங்கினால் மட்டுமே வட தமிழகத்திற்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் நேற்று இரவு நகரின் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவானது. இதனால் பூமியின் உஷ்ணம் சற்று தணிந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை அனேக இடங்களில் அவ்வப்போது கனமழையும் பதிவானது. அந்த வகையில், காலை 10 மணி வரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் சென்னை நகரில் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், அஷோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தேனாம்பேட்டை, சைதேப்பேட்டை, சின்னமலை, அடையாறு, அபிராமபுரம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான முதல் கனமழை பதிவானது. பல நாட்களாக மக்களை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதேபோல், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவுகிறது மற்றும் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று, சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர்  திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 12 ஆம் தேதி, 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் அக்டோபர் 13 ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மற்றும்  காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகளிலும் மற்றும்  புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 14 ஆம் தேதி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News