5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் – நடிகர் வேல ராமமூர்த்தி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் செய்திகள் தற்போது முடிவு பெற்றுள்ளது. இதில் ஆதி குணசேகரன் ஆக நடித்த நடிகர் வேலராமமூர்த்தி அந்த சீரியல் நடித்தது குறித்து வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் – நடிகர் வேல ராமமூர்த்தி
மாரிமுத்து – வேலு ராமமூர்த்தி
intern
Tamil TV9 | Updated On: 17 Jun 2024 23:58 PM

சன் டிவியில் டிஆர்பியில் வெற்றி நடை போட்டு வந்த எதிர்நீச்சல் மக்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் நான்கு பேரும் தங்களது குடும்பத்துடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களது மனைவிகளை ஆணாதிக்கம் நிறைந்தவர்களாக, படித்த படித்த பெண்களை திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு கீழ்தான் நீங்கள் என்று அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களை கதைக்களமாக கொண்டு இந்த சீரியல் நகர்ந்து வந்தது. இந்த சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்து, விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரின் மறைவு சீரியல் குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.  பின்னர் இந்த சீரியலுக்கு நடிகர் வேலு ராமமூர்த்தி ஒப்பந்தமானார்.

Also Read: விக்னேஷ்சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி… காரணம் தெரியுமா..!

ஆதி குணசேகரனாக மாரிமுத்து இருந்த இடத்தில், வேலு ராமமூர்த்தியை அவரது ரசிகர்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசி வரையிலும் அந்த கேரக்டர் தனக்கே உரித்தான வில்லன் பானையில் கலக்கி வந்தாலும் இறுதியில் டிஆர்பி சற்று சரிந்து தான் காணப்பட்டது. சீரியல் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், அதில் நடிகர் வேலுராமமூர்த்தி தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கடந்த வாரம் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் மாரிமுத்துவின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் போதும்டா சாமி என்று கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். இதனால் வருத்தம் அடைந்த அவர், ஏன் இந்த சீரியலில் நடித்தும் என்று அவமானமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த சீரியலில் நடித்தது கடைசி வரை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

Also Read: Chennai Power cut: சென்னையில் நாளை மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை வெளிக்கொண்டு காட்டியதில் ரசிகர்களிடையே நல்ல வரவிருப்பை பெற்றது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட கதை களத்தில பெண்களின் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து கதை எழுதப்பட்டிருந்தது. மிகப்பெரிய நடிகர் ஒருவர் தன்னுடைய கதாபாத்திரத்தை நான் ஏன் ஏற்று நடித்தோம் என்று வெளிப்படையாக கூறும் அளவிற்கு நம்முடைய ரசிகர்கள் நடந்து கொண்டனர். இதற்கு  நடிகர் வேலு ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இது எவன் பாக்குற வேலை, இப்படி ஒரு பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. அந்த சீரியல் என்னை உலக தமிழர்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது. அதில் நான் மனப்பூர்வாக பங்கேற்றேன். இது தான் உண்மை என்று விளக்கமளித்துள்ளார்.

Latest News