Shalini Ajithkumar: நடிகை ஷாலினி கொடுத்த எச்சரிக்கை.. போலிக்கணக்கு குறித்து பதிவு!
நடிகை ஷாலினி பெயரில் எக்ஸ் தளத்தில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டிருப்பாதாகவும் அதை, யாரும் ஃபாலோவ் செய்ய வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தன்னுடன் அமர்களம் நடித்த ஷாலினியை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிகை ஷாலினி அஜித்குமார் கடந்த ஆண்டு இன்ஸ்டகிராமில் புதிய கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் நடிகர் அஜீத் தொடர்பான புகைப்படங்களையும் நடிகை ஷாலினி பதிவிட்டு வந்தார். இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் ஷாலினி அஜீத்குமார் என்ற பெயரில் ஒரு போலி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட அஜித் ஷாலினி ரசிகர்கள் பலரும் அதை பாலோ செய்ய ஆரம்பித்தனர். அந்த போலி கணக்கு பற்றி அறிந்த ஷாலினி அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அந்த போலி அக்கவுண்ட் தன்னுடையது இல்லை எனக் கூறி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கை பதிவை ஷாலினி வெளியிட்டுள்ளார்.
Also Read: தோனி ரோம் நகரில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
பொது வெளியில் அதிகம் தலைக்காட்டாத அஜீத், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீடியா முன்பு தோன்றினார். நடிகர் அஜித் குமார் எப்போதும் மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருப்பவர். ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் கூட அவருக்கு அதிகாரபூர்வ கணக்கு இல்லை. அறிவித்து எதாவது வெளியிடுவது என்றால் அவரது மேனேஜர் மூலமாக தான் வெளியிட்டு வருகிறார். நடிகர் அஜித்திற்கு நேர்மாறாக அவரது மனைவி ஷாலினி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கணவரோடும், குழந்தைகளோடும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Also Read: Asritha: சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா..? நினைவுகளை இழந்து பாதிக்கப்பட்டேன் ..!
சில நேரங்களில் அஜீத் தனது ரசிகர்களுடன் எடுக்கும் செல்பி, மற்றும் வீடியோக்கள் மட்டுமே வெளிவந்தன. ஷாலினி மற்றும் அஜீத் மகன் ஆத்விக் இருவரும் சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை தவறாமல் காண வருகை தருவர். ஷாலினி சமீபகாலமாக, அஜீத்துடன் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிமா பிரபலங்களின் பேரில் போலியாக , இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்று சமூக வலைதளத்தில் போலி கணக்குகளை தொடங்கி, ஃபாலோவர்ஸ்களை அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடா முயற்சி” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.