விக்னேஷ்சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி… காரணம் தெரியுமா..!
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகராக வளம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது 50 வது திரைப்படத்தை நிறைவு செய்துள்ளார். அவருடைய 50 வது திரைப்படமான மகாராஜா திரையரங்குகளில்வெற்றியை குவித்து வருகிறது. இந்நிலையில், மகாராஜா திரைப்பத்தின் ப்ரோமஷனில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, விக்னேஷ்சிவன் பற்றி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, துணைநடிகராக இருந்து, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். தென்மேற்கு காற்று திரைப்படம் இவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு கிடைத்த தொடர் வாய்ப்புகளால், இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் தற்போது வலம் வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் மகாராஜா. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தப் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
Also Read: தண்ணீர் குடிக்காமல் ஒரு மனிதன் எத்தனை நாட்கள் வாழ முடியும் தெரியுமா? ஆய்வு சொல்லும் முடிவுகள்!
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரியாக வேண்டும் எண்ணத்தில் இருக்கும் தாய், ரவுடியாக மாறவேண்டும் எண்ணத்தில் இருக்கும் ஹீரோ, தான் காதலிக்கும் பெண்ணின் எதிரிக்கும் இடையே நடக்கும் கதைதான் நான் ரவுடி தான். சாதாரண கதைக்களத்தில் இருந்து, காமெடி மற்றும் காதல் காட்சிகளால் இப்படம், நல்ல விமர்சனங்களை வெற்றிபெற்றது. இந்த படப்பிடிப்பின் போது தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நடைபெற்ற கருத்து வேறுபாடு குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Also Read: Chennai Power cut: சென்னையில் நாளை மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?
இயக்குநர் விக்னேஷ்சிவன் படத்தின் கதையை கூறும்போது, நன்றாக இருந்தது. அவர் கூறியபடி நடிக்க முயற்சி செய்தேன். அப்போது விக்கி என்னை வேற மாதிரி நடிக்க சொன்னார். இதனால், விக்கியிடம் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்காதே என்றெல்லாம் சொல்லி சண்டைப் போட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை பற்றி நான் தெளிவாக புரிந்துக் கொள்ள நான்கு நாட்களுக்கு மேலானது. அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால் என்னிடம் முன்பே கூறியிருந்தார். பாண்டி கேரக்டர் நல்ல பையன்தான். ஆனால், பிராடு. அவன் அழும்போது எல்லோரும் சிரிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் பற்றி கூறினார்.