Viral Video: வாயில் ராஜ நாகம் வைத்து ரீல்ஸ்.. லைக்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்..
youtube சேனலை ஆரம்பித்து கன்டென்ட் என்ற பெயரில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைவதும் அதன் மூலம் சம்பாதிப்பதும் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொலைக்காட்சி சினிமா போன்ற ஊடகங்கள் வழியாக பிரபலமடைய நினைக்கும் இளைஞர்கள் தற்போது சமூக வலைதளம் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு பலரும் பிரபலம் அடைந்த காரணத்தினால், தாங்களும் அது போன்று குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இறங்குகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தால் பரிபோன உயிர்: சிவா என்ற இளைஞர் ரீல்ஸ்காக வாயில் ராஜ நாகம் வைத்து வீடியோ பதிவிட்டுள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் மயங்கிய நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். youtube சேனலை ஆரம்பித்து கன்டென்ட் என்ற பெயரில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைவதும் அதன் மூலம் சம்பாதிப்பதும் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொலைக்காட்சி சினிமா போன்ற ஊடகங்கள் வழியாக பிரபலமடைய நினைக்கும் இளைஞர்கள் தற்போது சமூக வலைதளம் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு பலரும் பிரபலம் அடைந்த காரணத்தினால், தாங்களும் அது போன்று குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இறங்குகின்றனர். பொதுமக்கள் தங்கள் youtube சேனலை பார்த்து சப்ஸ்கிரைப் செய்து லைக் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லையை மீறியும், சட்டங்களை மீறியும் பல வீடியோக்களை வெளியிட்டு யூட்யூபில் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க: தாசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
அந்த வகையில் கமாரெட்டி மாவட்டம், பன்ஸ்வாடா மண்டலம், தேசாய்பேட் கிராமத்தில், பாம்பை வைத்து வித்தைக்காட்டுபவரின் மகன் சிவா என்ற இளைஞர் அந்த கிராமத்தில் ஊருக்குள் புகுந்த ராஜ நாகத்தை பிடித்துள்ளார். அப்போது அந்த பாம்பை வைத்து சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக யாரும் செய்யாத ஒரு விஷயத்தை மேற்கொண்டுள்ளார். விளையாட்டு விபரீதம் ஆனது என்ற சொல் இவர் கதையில் உண்மையாகியுள்ளது.
அதாவது 6 அடி ராஜ நாகத்தை வாயில் கடித்தபடி ரீல்ஸ் எடுத்துள்ளார். ஆனால் அந்த பாம்பு அவரை கடித்தது கூட தெரியாமல் வீடியோ மோகத்தில் மூழ்கியுள்ளார். வீடியோ எடுத்து முடித்தப்பின் அவர் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடலில் அதிக வியர்வை வெளியேறி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கி விழுந்துள்ளார்.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தியில் 1519 சிலைகள் வைத்து வழிபட அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன?
உடனடியாக சிவாவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவர் ராஜ நாகம் பாம்பு கடித்ததில் தான் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞரின் இந்த செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.