எலும்பு முறிவு முதல் பசியின்மை வரை.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.! - Tamil News | From fractures to anorexia Benefits of Solving Pirandai..! | TV9 Tamil

எலும்பு முறிவு முதல் பசியின்மை வரை.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.!

Updated On: 

29 Jun 2024 11:59 AM

பிரண்டை இயற்கையாக அமைந்த மூலிகை பொருளாக உள்ளது. பிரண்டையினால் ஏராளமான நன்மைகள் உள்ளன. எலும்பு முறிவு முதல் பசியின்மை வரை அனைத்திற்கு ஒரே தீர்வாய் அமைகிறது. நம்முடைய முன்னோர் காலத்தில் பிரண்டையை அன்றாடம் வாழ்வில் உணவாக சேர்த்து கொண்டதால் மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பிரண்டையின் பலன்கள் பற்றி காணலாம்.

எலும்பு முறிவு முதல் பசியின்மை வரை.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.!
Follow Us On

நம்முடைய நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும், மருத்துவக் குணம் கொண்டது. கிராமபுறங்களில் பிரண்டையை வீடுகளில் வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம். இவை வயல்வெளிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால் மருத்துவரின் உதவி இன்றியே இயற்கையாக பல்வேறு நோய்களுக்கு நிவாரனம் பெறலாம். பிரண்டையில் பல்வேறு வகைகள் இருந்தாலும், நாம் பொதுவாக நான்கு பட்டைகள் கொண்ட பிரண்டை அதிகளவில் கிடைப்பதால் அதனை பயன்படுத்தி வருகிறோம்.

Also Read: தினமும் உடல் வலி பிரச்னையா? இதை மட்டும் செய்யுங்க போதும்!

பிரண்டை நம்முடைய உடலில் தோற்றத்தை மேம்படுத்தி, இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பிரண்டையை துவையலாக சாப்பிடுவதன் மூலம் பசியை அதிகப்படுத்துகிறது. வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலை சுறுசுறுப்பாக, வைத்துக்கொள்ள உதவுகிறது. ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.

இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

சுளுக்கு, தசைப்பிடிப்பு, உடல் வலி போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இது சிறந்த நிவாரணமாக உள்ளது. பிரண்டையை துவையலாக செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்து நிவாரனம் அளிக்கிறது. இது ஞாபகசக்தியை அதிகப்படுத்தி, மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது. எலும்புகளுக்கு சக்தி அளித்து ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாயு பிடிப்பைப் போக்குகிறது. பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.

Also Read: கவனம் மக்களே… பெர்த் அறுந்து விழுந்து உயிரிழந்த பயணி.. காரணத்தை சொன்ன ரயில்வே நிர்வாகம்!

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது . இது போன்ற பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகிறது. பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு போன்றவற்றிற்கு உதவுகிறது.

உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குகிறது. வாதநோய், கபநோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை பிரண்டை பயன்படுத்தினால் வாத கப தோஷம் கட்டுப்படுத்துகிறது. பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது. பிரண்டையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது.

 

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version