Cooking Oil: சமையல் எண்ணெயை அடுப்புக்கு அருகில் வைத்தால் ஆபத்தா.. காரணம் என்ன? - Tamil News | Is it dangerous to keep cooking oil near the stove.. What is the reason? | TV9 Tamil

Cooking Oil: சமையல் எண்ணெயை அடுப்புக்கு அருகில் வைத்தால் ஆபத்தா.. காரணம் என்ன?

Updated On: 

08 Jun 2024 13:02 PM

சமீபத்திய ஆய்வு ஒன்று சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையை சரியான வெப்ப நிலையில் வைத்து சேமித்து வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எண்ணெய் உணவுகளுக்கு சுவையை கொடுத்தாலும், பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை நாம் அடுப்புக்கு அருகில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், சரியான இடத்தில் சேமித்து வைக்கும் முறை பற்றியும் காணலாம்.

Cooking Oil: சமையல் எண்ணெயை அடுப்புக்கு அருகில் வைத்தால் ஆபத்தா.. காரணம் என்ன?

சமையல் எண்ணெய்

Follow Us On

சமையல் நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சமையல் செய்யும் எண்ணையை அடுப்புக்கு மிக அருகில் வைப்பது ஆபத்து விளைவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமையலுக்கு நாம் அன்றாடம் பாமாயில் கடலை எண்ணெய் சன் பிளவர் ஆயில் போன்று பல்வேறு எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணையில் பல்வேறு கலப்படங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணையில் பல்வேறு கலப்படங்கள் உள்ளன. அவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயை மறுசுழற்சி செய்வதும் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கிறது. குறிப்பாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் மீதமுள்ள எண்ணெயை அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அது உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுகிறது. மேலும் சமையல் எண்ணெய் களை சரியான முறையில் சேமித்து வைத்து அதனை பயன்படுத்துவது ஏராளமான நன்மைகளை பெறச் செய்கிறது.

Also Read: Vivo X Fold3 Pro ஸ்மார்ட்போன்: விலையை செக் பண்ணுங்க!

சமையல் செய்யும் அடுப்பிற்கு அருகில் எண்ணெய்களை வைத்திருப்பது புற்று நோய்க்கு வழி வகுப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் நாள்பட்ட உடல் பிரச்சினைகளையும் உபாதைகளையும் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. எண்ணெய்களை அடுப்பின் அருகில் சேமித்து வைப்பது பல பிரச்சனைகளுக்கு வழி வகிக்கிறது. குறிப்பாக அடுப்பில் எண்ணெயை சேமித்து வைப்பதன் மூலம் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் ஆக்ஸிஜனேற்றம் முறையை அதிகப்படுத்தி எண்ணெயை சூடாகவே வைத்திருக்கிறது. ஆக்சிஜனேற்றம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதாகவும் மேலும் புற்றுநோயை உருவாக்குவதாகவும் மருத்துவ நிபுணர்களும் சமையல்கலை நிபுணர்களும் கூறுகின்றனர்.

சமையல் எண்ணெயில் அதிக கொழுப்புச் சத்துக்கள் உள்ளதால் ஆக்ஸிஜன் ஏற்றும் காரணமாக எண்ணெய் திறந்தவுடன் அது மோசமான நிலையை சென்றடைகிறது. இது ஒரு ரசாயன எதிர்வினை மற்றும் வளிமண்டல ஆக்ஸிஜன் ட்ரை கிளிசரைடு போன்றவை ஃபேட்டி ஆசிட் சென்னை தாக்குகிறது. இந்த எண்ணெய்கள் செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது இதில் உள்ள நச்சு கலவைகள் நமது உடலில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈயை எதிர்மறையாக குறைக்கிறது ஆரோக்கியத்தையும் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் கூல் என்றனர்

Also Read: Pregnant Women: கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

சமையல் எண்ணெய்களை வாங்கும் போது மற்றும் சேமிக்கும் போது நம்மில் பெரும்பாலோர் சமையல் எண்ணெய்களை பிரத்யேக கொள்கலன்கள் அல்லது பாட்டில்களில் மாற்றக்கூடாது. ஏனெனில் அது எண்ணெயை சிதைந்த ஆக்ஸிஜனை அனுமதித்து எண்ணெயை மாசுபடுத்துகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் எண்ணெயின் தரத்தை குறைக்கிறது. சமையல் எண்ணெய்களை ஒரே பாட்டிலில் வைத்திருப்பது சிறந்தது , மேலும் 1-2 மாதங்களுக்குள் நீங்கள் பயன்படுத்தக்கூடியவற்றை மட்டும் வாங்குவது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே, எண்ணெய்களின் காலாவதி தேதியை எப்போதும் சரிபார்ப்பது சிறந்தது.

பொதுவாக, எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெயை 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம். இது பொதுவாக மிக நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது, ஆனால் சேமிப்பு நிலைமைகள் எண்ணெயின் ஆயுளை கணிசமாக மாற்றும் என்றும் கூறப்படுகிறது. நீண்ட நேரம் சேமிக்கும் போது கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும், ஏனெனில் பிளாஸ்டிக் காலப்போக்கில் ரசாயனங்களை வெளியேற்றி, எண்ணெயின் தன்மையை பாதிக்கிறது.

இரும்பு மற்றும் செம்பு பாட்டில்களில் சேமித்து வைக்க வேண்டாம், ஏனெனில் அவை எண்ணெய்களுடன் தொடர்பு கொள்கின்றன மற்றும் அவற்றை நுகர்வுக்கு பல நோய்களுக்கு வித்திடும். சில சமையல் எண்ணெய்கள் அறை வெப்பநிலையில் சிறப்பாக இருந்தாலும், ட்ரஃபிள் ஆயில், அவகேடோ, கார்ன், சஃப்லார் மற்றும் சில்லி போன்ற சில எண்ணெய்களை ஃபிரிட்ஜில் சேமிப்பதன் மூலம் அதன் ஆயுள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version