Gautam Gambhir: “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எனக்கு விரும்பம் தான் – கவுதம் கம்பீர்” - Tamil News | "I want to be the head coach of the Indian team - Gautam Gambhir" | TV9 Tamil

Gautam Gambhir: “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எனக்கு விரும்பம் தான் – கவுதம் கம்பீர்”

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது கம்பீர் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக தேசிய அணிக்கு பங்களிப்பது மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Gautam Gambhir: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எனக்கு விரும்பம் தான் - கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

Updated On: 

04 Jun 2024 11:47 AM

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ராகுல் டிராவிட் 2021-ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பை முடிந்த சமயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், பிசிசிஐ இந்த வருடம் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என அறிவித்த நிலையில், அவரின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு முடிவடைந்த பயிற்சியாளர் பதவியை, டி20 உலகக்கோப்பை கருத்தில் கொண்டு டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

Also Read:Ilayaraja: “மகளை பறிக்கொடுத்தேன்.. பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” இளையராஜா உருக்கம்!

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான பதவி முடிவு பெறும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய பயிற்சியாளரை தேடி வரும் நிலையில், ராகுல் டிராவிட்டை மீண்டும் விண்ணப்பிக்கும்படி வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தது. ஆனால், டிராவிட், அதனை மறுத்துவிட்டார். ராகுல் டிராவிட் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை முடிவடைந்த உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றார். டிராவிட் தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022 டி20 உலக கோப்பை அரையிறுதிப்போட்டி வரை சென்ற நிலையில் ஆசிய கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், அவரே வெளிப்படையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர விருப்பம் தான் என்று தெரிவித்துள்ளார்.

Also Read: “வெளியே இருந்த 21 நாள்கள்.. நாட்டுக்காக பிரச்சாரம் செய்தேன்” கெஜ்ரிவால் உருக்கம்!

சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவுதம் கம்பீர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது. “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற எனக்கு விருப்பம் தான். உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதைக் காட்டிலும் கவுரமான ஒரு விஷயம் இருக்க முடியுமா என்ன? 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில், கம்பீர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!