5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

T20 World Cup: டி20 உலக கோப்பையை வென்று தாயகம் திரும்பும் வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு.. வாகன பேரணிக்கு பிசிசிஐ ஏற்பாடு..!

Team India: டி20 உலக கோப்ப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நாளை இந்தியா திரும்பவுள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பார்படாஸில்ஏற்பட்ட புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் தனி விமான மூலம் இந்திய வீரர்கள் இந்தியாவிர்கு வரவுள்ளனர்.

T20 World Cup: டி20 உலக கோப்பையை வென்று தாயகம் திரும்பும் வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு.. வாகன பேரணிக்கு பிசிசிஐ ஏற்பாடு..!
இந்திய வீரர்கள்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 04 Jul 2024 06:43 AM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.

Also Read: OTT : மாதாந்திர பிளான்களின் விலையை உயர்த்திய Netflix.. அதிர்ச்சியில் பயனர்கள்.. எவ்வளவு தெரியுமா?

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானமான ‘AIC24WC’ ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 வேர்ல்ட் கப் என்பதன் சுருக்கம்தான் இது. அந்த விமானத்தில் இந்திய வீரர்கள், அணியின் உறுப்பினர்கள், வீரர்களின் குடும்பத்தினர், பிசிசிஐ பிரதிநிதிகள் மற்றும் புயல் காரணமாக அங்கு சிக்கிய இந்திய ஊடக நிறுவன ஊழியர்கள் வர உள்ளனர். அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம் சுமார் 16 நேர மணி பயணத்திற்கு பிறகு தலைநகர் டெல்லியை நாளை காலை 6 மணி அளவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாற்றங்கள் இருந்தால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வானிலை சீரான நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் இருந்து விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் புறப்பட்டனர். இவர்கள், நாளை காலை சுமார் 6 மணி அளவில் டெல்லிக்கு வந்தடைவார்கள் என தகவல் தெரிவிக்கின்றன. உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி வீரர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன் வாகன பேரணிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Also Read: Rice: வீட்டில் உள்ள அரிசி, பருப்புகளில் வண்டு தொல்லையா…. உடனே இத பண்ணுங்க..!

இந்திய கிரிக்கெட் அணி 17 வருடத்திற்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றி கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் வாகனத்தில் பேரணியாக செல்லவுள்ளனர் என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Latest News