Crime: 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோவில் கைது செய்யப்பட்ட தந்தை.. நடந்தது என்ன? - Tamil News | 5 years old daughter physically abused by her father and arrested under pocso case in Chennai, know more in tamil | TV9 Tamil

Crime: 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோவில் கைது செய்யப்பட்ட தந்தை.. நடந்தது என்ன?

Updated On: 

04 Sep 2024 09:28 AM

பெண் குழந்தைகளுக்கும் தந்தைக்கும் ஒரு பாசமான உறவு இருக்கும். அந்த பிரச்சனையாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் தந்தையிடம் தைரியமாக எடுத்துச் சொல்ல முடியும். சில விஷயத்தில் தாய் அனுமதி கொடுக்கவில்லை என்றால் கூட தந்தையில் அன்பு மொழி பேசி பெண் பிள்ளைகள் காரியத்தை சாதித்து விடுவார்கள்.

Crime: 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோவில் கைது செய்யப்பட்ட தந்தை.. நடந்தது என்ன?

கோப்பு புகைப்படம் (image source: getty)

Follow Us On

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது: சென்னையில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்ஸோ கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெண் குழந்தைகளுக்கும் தந்தைக்கும் ஒரு பாசமான உறவு இருக்கும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் தந்தையிடம் தைரியமாக எடுத்துச் சொல்ல முடியும். சில விஷயத்தில் தாய் அனுமதி கொடுக்கவில்லை என்றால் கூட தந்தையிடம் அன்பு மொழி பேசி பெண் பிள்ளைகள் காரியத்தை சாதித்து விடுவார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் எங்கே எப்போது எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. தந்தை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, நெருங்கிய உறவினர்கள், அண்ணன் என எல்லா விதத்திலும் இன்று பெண் பிள்ளைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடந்து வருகிறது.

அந்த அவகையில் சென்னை தாம்பரத்தில் தான் பெற்ற மகளை குளிக்க வைப்பதாக கூறி கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம், பட்டேல் நகரை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (37), எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது மூத்த மகள் தாம்பரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பும், ஐந்து வயது இளைய மகள் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். சில நாட்களாக சிறு நீர் கழிக்கும் இளைய மகள் எரிச்சலாக இருப்பதாக தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு உடல் சூடு காரணமாக இருக்கலாம் என அவரது தாயார் நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்ராஜன் தனது இளைய மகளை குளிக்க வைக்கும் போது தவறாக நடந்த கொண்டதை தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்து சந்தேகத்தின் பேரில் சிறுமியிடம் விசாரித்த போது சௌந்தர்ராஜன் பிப்ரவரி மாதம் முதல் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

Also Read: சென்னை ஈசிஆரில் கோர விபத்து.. உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

இது குறித்து சிறுமியின் தாய் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சௌந்தரராஜனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சிறு வயது முதல் அவர்களுக்கு நாம் குட் டச் பேட் டச் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். தாய், தந்தை, உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் என யாராக இருந்தாலும் தவறான எண்ணத்துடன் நடந்துக்கொண்டால் அதனை உடனடியாக வீட்டில் தைரியத்துடன் சொல்ல வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

Related Stories
TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Weather Alert: சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!
Chennai Powercut: சென்னையில் இந்த பகுதிகளுக்கு இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version