5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கோர விபத்து.. 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

இன்று உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையேரம் இருக்கும் மரத்தில் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு சுற்றுலா வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு, அதே வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கோர விபத்து..  6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..
உளுந்தூர்பேட்டை விபத்து (pic courtesy: twitter)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 25 Sep 2024 07:38 AM

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையின் இடதுபுரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக் கொள்ளானதில் வேனின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 14 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக அதிகாலை நேரத்தில் விபத்துகள் நடக்கும் அபாயங்கள் அதிகரித்து வருகிறது. அதிகாலை நேரம் என்பதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது.

அந்த வகையில், இன்று உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையேரம் இருக்கும் மரத்தில் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு சுற்றுலா வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு, அதே வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தின் முகப்பு பகுதியில் நவீன இயந்திரம் கொண்டு உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர் மேலும் விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்வி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் நடந்த இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை.. உங்க ஏரியாவில் எப்படி? லிஸ்ட் இதோ..

இதேபோல் கடந்த வாரம், சிதம்பரம் அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை, பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப உயிரிழந்தனர். உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் இதயத்துல்லா. துபாயில் இருந்த இவர் உடல்நலக் குறைவால் சென்னை கொண்டு வரப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக இவரது மைத்துனரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்வர் (வயது 56) தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்றுள்ளார்.

இவர்கள் சென்னை சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த யாசர்அராபத் (40) ஒட்டி வந்துள்ளார். அந்த காரில் முகமது அன்வர், அவர்களது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த ஹாஜிதாபேகம் (வயது 62), திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரபத் நிஷா (வயது 30) அவரது 3 வயது குழந்தை அப்னான் ஆகியோர் காரில் பயணம் செய்தனர்.

அந்த கார் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Latest News