5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின் தடை.. எந்தெந்த ஏரியா? லிஸ்ட் இதோ..

தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன.

Tamilnadu Powercut: சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின் தடை.. எந்தெந்த ஏரியா? லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 16 Oct 2024 07:46 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 16) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கோவை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன.

மின்தடை:

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 16ஆம் தேதியான இன்று தமிழகத்தில் சேலம், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை?

சென்னை:

வியாசர்பாடி பகுதியில் கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சுப்ரமணியபுரம் அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியுபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.ரோடு, சுந்தரராஜபுரம், ராஜ்புரம் தெரு, வள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும் சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறாது. ஆனால் பாதுகாப்பு காரணமாக சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றிய பின் மின் விநியோகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளையும் சென்னையில் அதிகனமழை இருக்கும் காரணத்தால் நாளையும் பராமரிப்பு பணிகள் நடைபெறாது.

மேலும் படிக்க: தந்தையின் மரணம்.. மைதானத்திற்கு நடுவே கதறி அழுத பாகிஸ்தான் கேப்டன்!

கோவை:

காளப்பட்டி, வில்லிங்குறிச்சி கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், கோவை சாவடி புதர், வீரப்பனூர், கலாலபுரம் நல்வெர், என்.ஜே.புரம், கே.வி.பாலயம், போனூர், வெல்லலூர், அன்ஜாவலயம், கொச்சலாலயம், முதலாபுரம், கன்னிசேர்பட்டி, எரசக்கநாயக்கனூர், கீரநத்தம், வில்லங்குறிச்சி, விஸ்வசாபுரம், வருவாய்நகர், அத்திபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: கொட்டும் மழை.. 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

திருச்சி:

தேனூர், வெங்குக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, பனமங்களம், திருப்பத்தூர், கங்காவேரி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பைரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்ரோடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், புதுவலசு கங்காபுரம், எழூர், ரெட்வலசை, அத்திப்பாடி, பாவக்கல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படுகிறது.

சேலம்:

சீரகபாடி, வேம்படித்தாளம், கே.கே.நகர், பாப்பம்பாடி, இளம்பிள்ளை நகரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் லக்கியம்பட்டி, ஓடப்படி, உங்கரானஹள்ளி, சிப்காட், பாரதிபுரம், சாலைகிராமம், வண்டல், கோட்டையூர், மாட்ரப்பள்ளி, எம்பாக்கம், விஷமங்கலாம், கீழ்மாதூர், புதுப்பூங்குளம், சிம்மனாபுதூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படுகிறது.

Latest News