Ajith Shalini: வைரலாகும் அஜித் ஷாலியின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Shalini Ajith: நடிகை ஷாலினி தனது கணவர் அஜித்குமாருடன் மருத்துவமனைகள் அவரது கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமல் பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாலினிக்கு என்ன ஆனது என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்த புகைப்படத்தில் ஷாலினி கையை பிடித்திருக்கும் அஜித்குமாரின் புகைப்படம் வேகமாக இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக அவர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை ஷாலினியின் கையை அவரது கணவரான நடிகர் அஜீத் பிடித்திருக்கும்
புகைப்படத்தை ஷாலினி இணையத்தில் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டில் திரைப்பட சூட்டிங்கில் இருந்த அஜீத், தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஷாலினியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதால் அஜித் சென்னை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தன்னுடன் அமர்களம் நடித்த ஷாலினியை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிகை ஷாலினி அஜித்குமார் கடந்த ஆண்டு இன்ஸ்டகிராமில் புதிய கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் நடிகர் அஜீத் தொடர்பான புகைப்படங்களையும் நடிகை ஷாலினி பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி மருத்துவமனை படுக்கையில், ஷாலினியின் கையை பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தில் என்று அன்புடன் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இதில் வேறு எதுவும் கூறப்படாத நிலையில், நடிகை ஷாலினிக்கு என்ன ஆயிற்று என்று இணைய வாசிகள் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தன்னுடன் அமர்களம் நடித்த ஷாலினியை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அஜித் உலகில் எங்கிருந்தாலும், தன்னுடை மனைவி, மகள், மகனின் பிறந்தநாள் போன்ற முக்கியமான நாட்களில் குடும்பத்துடன் அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தனது 24 ஆம் ஆண்டு திருமண நாளையும் தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார்.
தல என்று ரசிகர்களால் அன்போது அழைக்கப்பட்ட அஜித், தன்னை அஜித்குமார் என்று கூப்பிடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார். சினிமாவில் நடிகராக இருந்தாலும், பைக் ரேஸ், கார் ரேஸில் ஆர்வம் அதிமுள்ளதால், தனியாக தனது பைக்கில் உலகம் சுற்றியும், கார் ரேசிலும் பங்கேற்று வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக அஜீத்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அறுவை சிகிச்சை கொண்டநிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Also Read: நீல நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும் கடல்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பொது வெளியில் அதிகம் தலைக்காட்டாத அஜீத், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீடியா முன்பு தோன்றினார். சில நேரங்களில் அவர் தனது ரசிகர்களுடன் எடுக்கும் செல்பி, மற்றும் வீடியோக்கள் மட்டுமே வெளிவந்தன. ஷாலினி மற்றும் அஜீத் மகன் ஆத்விக் இருவரும் சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை தவறாமல் காண வருகை தருவர். ஷாலினி சமீபகாலமாக, அஜீத்துடன் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் சென்னையிலுள்ள பிரபலமான ஸ்டார் ஓட்டலில் தனது மனைவியுடன் திருமண நாளை அஜித்குமார் கொண்டாடியுள்ளார். அந்த ஓட்டலுக்கு அவர் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடா முயற்சி” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.